[vc_row][vc_column][vc_column_text]
www.tnpsc.academy – TNPSC Tamil Current Affairs June 27, 2017 (27/06/2017)
தலைப்பு : விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய புதிய கண்டுபிடிப்புகள், சமீபத்திய நாட்குறிப்புகள், பொது விழிப்புணர்வு
ஆளில்லா நிலை ரயில்வழி பாதைகளில் பயனர்களை எச்சரிக்கை செய்கிறது இஸ்ரோ உருவாக்கிய அமைப்பு
இந்திய விண்வெளி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) செயற்கைகோள் சார்ந்த ஒரு முறையை உருவாக்கியுள்ளது.
ரயில்வழிப்பாதைகளில் ஆளில்லா நிலை தண்டவாளம் கடந்துசெல்லுதலில் ரயில்கள் நெருங்குகிறது பற்றி சாலை பயனர்களை எச்சரிக்க இது பயன்படுகிறது.
மேலும் உண்மையான நேர அடிப்படையில் ரயில் இயக்கத்தை கண்காணிப்பதற்கும் உதவுகிறது.
அது எவ்வாறு செயல்படுகிறது?
இரயில் வண்டிகளில் இஸ்ரோ உருவாக்கிய மேம்பட்ட ஒருங்கிணைந்த சுற்று (ஐ.சி.) அமைப்பை ரயில்வே நிறுவுகிறது.
இதன் மூலம் ஒரு இரயில் ஒரு ரயில்பாதையை கடந்து செல்லும்போது சாலை பயனர்கள் ஒரு சைரனால் (சத்தத்தினால்) எச்சரிக்கப்படுவார்கள்.
சுமார் 500 மீட்டர் நிலை முன்பு, சைரன்கள் ஒருங்கிணைந்த சுற்றமைப்பு (IC) மூலம் செயல்படுத்தப்படும். செயற்கைக்கோள் அடிப்படையிலான அமைப்பானது நாட்டு வரைபடத்தில் இரயில்வேக்கு உதவும். மற்றும் தொழில்நுட்பம் விபத்துக்களை உடனுக்குடன் தெரிவிக்க உதவிடும்.
ரயில்கள் மற்றும் நிலப்பகுதிகளின் சரியான இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்குப் பயன்படுகிறது.
இதன் நடவடிக்கைகள்:
பைலட் அடிப்படையில், மும்பை மற்றும் குவஹாத்தி ராஜ்தானி ரயில்கள் இந்த அமைப்பை கொண்டிருக்கும். மேலும் ரயில்களில் இதுபோன்ற தொழில்நுட்பத்தை ஒரு படிமுறை வாரியாக வடிவமைக்கப்படவுள்ளது.
_
தலைப்பு : பொது நிர்வாகம், சமீபத்திய நிகழ்வுகள்
கே கஸ்தூரிரங்கன், தேசிய கல்வி கொள்கையின் வரைவு குழுவிற்கு தலைமை தாங்குகிறார்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய கல்வி கொள்கை (NEP – National Education Policy) மீது இறுதி வரைவை உருவாக்குவதற்கான ஒரு புதிய குழுவை அமைத்துள்ளது.
இதற்காக முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஓ. தலைவரான கஸ்தூரிரங்கன் (K Kasturirangan) தலைமையில் ஒன்பது உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
_
தலைப்பு : அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள்
DeployBot
தென் கொரியாவினை சேர்ந்த விஞ்ஞானிகள் முதல் மடிக்கும் தன்மையுடைய நடக்கும் ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த மடிக்கும் ரோபோ நிற்கவைக்கும் பொழுது திறந்து கொள்ளும்.
இது எதிர்கால விண்வெளி பயணங்கள் மற்றும் பூமியில் கடலுக்குள் ஆய்வு செய்ய பயன்படுத்தப்பட இருக்கிறது.
DeployBot பற்றி;
இது “DeployBot” என பெயரிடப்பட்டுள்ளது. அவற்றின் மடிந்த நிலையில், அதன் பகுதிகள் சாய்ந்து காணப்படும் மேலும் அதனை நிறுத்தியபின் ஒரு சதுர வடிவில் விரிந்து கொள்ளும்.
_
தலைப்பு : விளையாட்டுகள் & விருதுகள்
ரோஜர் ஃபெடரர் தனது 100 வது விளையாட்டு பட்டத்தை வென்றார்
சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் தனது 100 வது பட்டத்தை ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸெவேவ்வை ஹாலே ஓபன் 2017 இல் தோற்கடித்ததன் மூலம் வென்றார்.
அவர் தனது டென்னிஸ் வரலாற்றில் இந்த சாதனையை நிகழ்த்திய 10 வது நபராக உள்ளார்.
ஹாலே ஓபன் என்றால் என்ன?
ஜெர்ரி வெபர் ஓபன் (Gerry Weber Open) என்றழைக்கப்படும் ஹாலே ஓபன் (The Halle Open), ஜெர்மனியின் ஹாலேவில் நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியாகும்.
ரோஜர் பெடரரைப் பற்றி:
ரோஜர் ஃபெடரர் ஒரு ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ஆவார்.
இவர் 18 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.
ATP தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை 302 வாரங்கள் தக்க வைத்திருந்தார்.
_
தலைப்பு : விளையாட்டுகள் & விருதுகள்
ISSF ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் 2017
ஜெர்மனியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எப் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் விளையாட்டில் துப்பாக்கி சுடும் வீரர் யஷஸ்வினி சிங் தேஸ்வால் (Yashaswini Singh Deswal) தங்கம் வென்றார்.
மேலும் அனிஷ் பவன்வாலா (Anish Bhanwala) ஜூனியர் ஆண்கள் 25m ஸ்டான்டஸ்ட் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார்.
இதன் மூலம் அவர் உலக சாதனையைப் பெற்றார்.
_
தலைப்பு : சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள், செய்திகளில் நபர்கள்
இந்தியாவை சேர்ந்த பூமிகா ஷர்மா மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார்
டெஹ்ராடூனை சேர்ந்த பூமிகா ஷர்மா வெனிஸ் நகரில் நடைபெற்ற மிஸ் வேர்ல் பாடிபில்டிங் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார்.
அனைத்து முக்கிய சுற்றுகளையும் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
உடல் தோற்றம், தனிப்பட்ட தோற்றம் மற்றும் வீழ்ச்சி வகைகளில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றார்.
[/vc_column_text][/vc_column][/vc_row]